குழந்தை இவன் சிரிப்பினிலே
கோடி செல்வம் குவியும்
குண்டுக் கன்னம் தொடுகையிலே
கோடி இன்பம் தோன்றும்
கள்ளன் இவன் தவழ்கையிலே
கண்ணன் அவன் நினைவு வரும்
கள்ளச் சிரிப்பினிலே
கவிதை பல தானே வரும்

மழலை இவன் இல்லையெனில்
மங்கைக்கோ வாசம் இல்லை
மண்ணில் உள்ள செல்வங்களில்
மகிழ்ச்சி தரும் செல்லம் இவன்
செல்லம் இவன் இல்லையெனில்
செல்லுமிடத்தில் உயர்வு இல்லை
செல்வம் தேடும் மானிடமே முதலில்
செல்லம் இவனை தேடிடுங்கள்
செல்வமது தேடிவரும்

Followers