மனதே மனதே வருந்தாதே
மாலவன் துணையுண்டு மயங்காதே
இனியும் தடையென்று நினையாதே
இனி நல்ல வழியுண்டு மறக்காதே

தோல்வியை கண்டு துவளாதே
தோன்றியது வீண் என்று எண்ணாதே – நீ
தோப்பில்லா மரமென்று நினைக்காதே – அவனை
தோத்திரம் செய்வதை நிறுத்தாதே

மன்மதன் அழகு அவன் மேனி
மழலையின் சிரிப்பு அவன் இதழில்
கருணையின் வெள்ளம் அவன் கண்கள்
கலைகளின் மூலம் அவன் கழல்கள்

கண்ணன் என்பது அவன் பெயராம்
கருணை என்பது அவன் ஊராம்
எம்மவன் கண்ணணை நாடுங்கள்
எல்லா சுகங்களும் நல்கிடுவான்

கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்
கள்ளன் வேண்டும் கருணை உள்ளம்
கண்களிரண்டும் அவன் கழல்கள்
காணும் நாளே திருநாளாம்

Followers